Wednesday, November 2, 2011
சகல ஆத்துமாக்கள் நினைவு திருநாள்
சிறிது தூரமோ, நீண்ட தூரமோ நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு உடன் வந்தவர்கள் அல்லது நாம் ஜனிக்கும் முன்பே இவ்வுலகைப் பிரிந்தவர்ககள், அவர்கள் நம் தாய், தந்தையராகலாம், உற்றார் உறவினராகலாம், நண்பராகலாம், மூதாதையராகலாம், யாரும் நினையாத ஆத்துமங்களா- கலாம், இப்புவியில் தோன்றி மறைந்த யாவரையும் நினைந்து அவர்க்காக வேண்டும் நன்னாள் இது. அவர்கள் அனைவரும் மறுமை எனும் பரிசைப் பெறவேண்டி தான, தருமங்கள் செய்வதும், வழிபாடுகள் நிகழ்த்துவதும் புண்ணியம் தேடித் தரும் செயல்களாகும். ஆத்துமார்த்தமாக அவர்கள் ந்ம்மோடு, நமக்காக, நம் உதவியை நாடி நிற்கிறார்கள். நிலையில்லாத இப்புவி வாழ்வை பற்றற்று வாழ்ந்து பயணத்தினை இனிதே நிறைவு செய்வோம். வாக்களிக்கப்பெற்றதைப் பெற்று மகிழ்வோம்.
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment