Friday, September 23, 2011

காவ்யா ஓர் காவியம் - உண்மைச் சம்பவங்களின் தழுவல்



லதா ஏய் லதா. எங்க போய்த் தொலஞ்சா இவ. எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு. என்னத்த சொல்லு. அவ செய்யிறதத்தான் செய்வா. எத எப்போ செய்யனும்னே தெரியாது. டயத்துக்கு ரெடி பண்ணவே மாட்டா. இது அந்தக் குடும்பத் தலைவர் சோமு மாதவன். வர்ரேன் வர்ரேன் எப்பவும் கால்ல வெண்ணிய ஊத்துன மாதிரி நின்னா எப்படி? கொஞ்சம் நிதானமாத்தான் போனா என்னவாம்? இது லதா குடும்பத்தலைவி. இவர்களுக்கு ஏக மகள் காவ்யா. அவள் பங்குக்கு அடடா காலைல எந்திச்சா உங்க ரண்டு பேர் தொல்லையும் தாங்கல. எப்போ பாரு சண்டைய போட்டுக்கிட்டு. மனுஷிய நிம்மதியா தூங்க விடறீங்களா?

இதுதான் சோமா (சோமு மாதவன் சுருங்கி சோமா)வோட குடும்பம். எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் கணவர், பெண்ணுக்கே உரிய பொறுமை என்பதே என்னவென்றெ தெரியாத மனனவி. பணிவென்பதே சிறிதும் இல்லாத மகள். நாளொரு சண்டையும், பொழுதொரு விரக்தியென இவர்கள் குடும்ப வாழ்க்கை நத்தையென நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் காவ்யா கல்லூரி செல்லும் வழியில் மன்மதன் ஒருவன் தினமும் இவளைப் பார்ப்பதும், சிரிப்பதுமாக இருந்தான். ஆரம்ப நாட்களில் இதனன சிறிதும் சட்டை செய்யாதவள் நாளடைவில் அவளையறியாமல் ஏதோ ஓர் ஈர்ப்பில் அவனன திரும்பிப் பார்க்க தொடங்கினாள். வாலிப முறுக்கும், எடுப்பான மீசையும், கட்டுடலுக்கான அளவான உடையுமென நவநாகரீக இளைஞனாக வலம் கொண்டிருந்த அவன் பெயர் மகேஸ். மகேஸின் கண் சாடை, பருவ மங்கயரை மயக்கும் உடல் அசைவும், உள்ளம் கொள்ளை கொண்ட சிரிப்பும் கண்டு அவன் காதல் வலையில் இவள் மயங்கி விழுந்தாள். பார்க், பீச் என்று அனுதினமும் காதலும் அவர்களைப்போலவே வளர்ந்து கொண்டு வந்தது. இந்நிலையில் ஒரு நாள்.....

தொடரும்....

0 comments:

Post a Comment