Thursday, March 21, 2019

நட்பு




நட்பு நம் சுவாசம்.
அதுவே உயிமூச்சு.
சுவாசிப்பதினால் உயிர்கள் வாழும்;
மெய் நட்பினால் மனிதம் மாண்புறும்.
உயிர்காப்பான் தோழன் என்பார்;
உள்ளத்து உவகையும் நட்பால்தான் சாத்தியம்.
உதடுகள் உச்சரிக்காத உள்ளத்தின்
மௌன மொழிகளை அறிவான் நண்பன்.
பெற்றவர், உற்றவரிடத்தில்கூட
திறந்திடாத மனம் உற்ற நட்பிடத்தில்
மடைதிறக்கும் என்றால்;
அந்நட்பு உயர்வானது, உயிர்காப்பது.
அவமானங்களையும் சகிப்பான் தோழன்.
இன்பமோ, துன்பமோ அவன்
உடனிருக்க; நாம் எதிலும் ஓர் அடி மேல்.
வாழ்வென்பது நட்பினால்தான்.
ஒட்டி உறவாடி, ஈருடல் ஓருயிராய்
பகிர்ந்த நாட்கள் நினைவுகளாய்
நீர்த்துவிட்டாலும், அவனிருப்பு
இப்புவியின் ஏதோ ஓர் மூலையில்
இருந்துவிட்டால் போதும்;
நாம் இம்மண்ணில் வாழ்ந்ததற்கான
சுவடுகள் காலம் கடந்தும் நிற்கும்.

0 comments:

Post a Comment