Saturday, September 17, 2011
பெரியார் பொன்மொழிகள்
பெரியார் நினனவு நாளில் இம் மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பொன் மொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
விதியை நம்பி மதியை இழக்காதே.
மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை . ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment