தொடர்ச்சி...
அந்தத் தாய்க்கு அவன் ஒரே மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மகளுடன் சேர்த்து இரு பிள்ளைகள். சுரேஷின் சிறு வயதில் தந்தை இறந்தார். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அன்றொரு நாள் அவனது தந்தை உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்தது. மருத்துவர்கள் அவர் கணையம் கெட்டு விட்டதாக சொன்னார்கள்.
உடலில் இரத்தத்திற்குப் பதில் ஆல்கஹால் ஓட ஆரம்பித்தால் உறுப்புக்கள் அதன் செயலிழப்பிற்கு அதுதானே காரணமாகிறது. ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு என்பது திரைப்பாடலுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் மதுக் கோப்பையில் குடியிருப்பு அவர் குடியே அற்றுப் போகும்படி இல்வாழ்வின் வேரை அசைத்துவிடக் கூடியது. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் சூழலில் அதன் கட்டுப்பாட்டிற்குள் மனிதன் மாண்டுபோகத்தானே வேண்டும். மரணம்தானே மது தரும் பரிசு. மனத்தின் கவலைகள் மறக்கப்பட மது உதவும் என்பது பொதுவாக குடிமக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம். போதையில் இருக்கும்வரை கவலைகள் நம் எண்ண அலைகளில் பயணிப்பதில்லை. ஆனால் போதை தெளிந்தபின் மீண்டும் அதே பழைய நிலை. உலகில் பெரும்பாலானோர் மனநிலை சரியாக இருப்பதற்கு போதை ஒருவாறு உதவிசெய்கிறது என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். நாள் முழுதும் ஒருவன் விரக்தி மற்றும் கவலை எண்ணங்களினால் சூழப்பட்டால் வாழ்வே சூன்யமாகிவிடும். இவ்வுலகில் தம் எஞ்சிய நாட்களை சிலர் இன்னும் வாழ போதை வஸ்துக்கள் தேவை என்பது அவர்கள் துணிவு.
தந்தை மறைவிற்க்குப்பின் தாயின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள். தகப்பன் இல்லாத பிள்ளை. தாயின் செல்லம். முரடனாய் வளர்ந்தான் சுரேஷ். யாரையும் மதிப்பதில்லை அவன். வயதில் மூத்தவர்கள்கூட அவனிடம் பேசத் தயங்கினார்கள். பாலூட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளை பள்ளிப் படிப்பு பாதியில் நின்றது. தன் வாலிப பிராயத்தினை எட்ட மனம் போன போக்கில் செலவு செய்யத் தொடங்கினான். தாய்க்கு ஒரே கவலை. இவன் எதிர்காலம் என்னாகுமோ என்று. காலங்கள் உருண்டோடின. சொந்த வீடு. வாடகை இல்லை. தாய்க்கு சாதாரண குமாஸ்தா வேலை. சொற்ப சம்பளம். கிடைத்த வருவாய் உணவுத் தேவைக்கு சரியாய் இருந்தது. அந்த நிலையிலும் தான் பெற்ற குழந்தைகளை வறுமை தெரியாமல் வளர்த்தெடுக்க அந்தத் தாய் எவ்வளவு அரும்பாடு பட்டிருப்பாள் என்பது நமக்குத் தெரியும். பருவ வயது தாண்ட கிடைக்கும் சிறிய வேலைகளை செய்து வந்த அவனுக்கு கப்பல் வேலை ஒரு கனவாய் இருந்தது. அவன் தாய்மாமன் அதே துறையில் பணியாற்றி வந்தது அவன் ஆர்வத்தினை அத்துறையின்பால் ஈர்த்ததில் வியப்பேதும் இல்லை. கப்பல் வேலை என்றால் மும்பைக்குச் சென்று அங்கே தங்கி கப்பல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஏறி, இறங்கி வாய்ப்பு தேடவேண்டும் என்ற விதிக்கு இவன் ஒன்றும் விலக்கில்லை. தாய் தன் மகனின் எதிர்காலம் கருதி, கடன்பட்டு இவனை மும்பைக்கு அனுப்பி வைத்தாள். வேலை கிடைத்தபாடில்லை. கையில் இருந்த பணமும் கொஞ்சம், கொஞ்சமாகக் கரைய இனி அங்கிருக்கமுடியாது என்ற நிலை. ஊர் வந்து சேர்ந்தான் குடிப்பழக்கம் தொற்றியவனாய், ஊதாரியாய்த் திரிந்தான். தாய் கண்ணீர் வடித்தாள் அவன் இழி நிலை கண்டு.
அது 2000 ஆம் ஆண்டின் முற்பகுதி. அக்கால கட்டத்தில் நான் சார்ந்திருக்கும் மறையில் ஈடுபாடு கொண்டு அதன்பால் கொண்ட ஆர்வத்தினால் சாலக்குடி, கேரளா சென்று அந்த மையத்தில் ஒருவார கால தியானத்தில் கலந்து கொண்டிருந்தேன். அதன் தாக்கம். ஏதோ உந்துதல். ஆவிக்குரிய அருங்கொடை இயக்க கூட்டம் ஒன்றை எங்கள் ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக நண்பர் ஒருவர் மூலம் பெங்களூருவில் விவிலியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றிற்கு அழைப்பு வந்தது. அதில் ஏற்கனவே கலந்து கொண்டிருந்த நண்பர் கருத்தரங்கு பற்றிய அறிமுகம் தந்ததாலும், அடுத்த ஒருவார கருத்தரங்கு அண்மையில் நடக்கவிருந்ததாலும் அதற்கென நபர்களைத் திரட்டும் பொறுப்பு எங்களுக்கு இருந்தது. அதன்மூலம் இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் எனக்கு அறிமுகமானது. என் நண்பர் ஒருவர்மூலம் என்னிடம் வந்து சேர்ந்தான் சுரேஷ். அவன் வாழ்ந்த பண்ணை வீடு அமைந்திருந்த தெருவில் குடியிருந்தாலும் அவர்கள் குடும்பம், உறவினர்கள் என அனைவரையும் அறிந்திருந்தாலும் நாங்கள் உறவுக்குத் தூரம் காட்டினோம். பார்த்தால் புன்னகை என்ற அளவிலே எங்கள் பழக்கம் தொடர்ந்திருந்தது.
சமீபத்தில் நான் வாசித்த புத்தகம் மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள். இந்நூலின் ஆசிரியர் பூர்வஜென்ம ஞாபகங்கள் குறித்து பல்வேறு சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். இதனை ஒட்டியே பல அமானுஷ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்திருந்தார். இயல்பாகவே ஜனனம், மரணம் மற்றும் மறு பிறப்பு பற்றி பல்வேறு கேள்விகளை என்னுள் சுமந்திருக்கும் எனக்கு, இரு அனுபவங்கள் நினைவிற்கு வந்தன.
இந்தப் பதிவின் நோக்கம் புறவிடயங்களில் நமது கவனத்தினைச் சிதறடிக்கும் நமக்கு பலநேரங்களில் மனசாட்சியின் மெல்லிய குரல் கேட்காமலே போய்விடுகிறது. நம் மனத்தினை பயன்படுத்தாத சூழலில் இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக நாம் இணைந்துவிடுகிறபோது மனத்தின் ஆழத்தில் ஒரு சமிஞ்சை அல்லது உணர்வு நம்மை உறக்கத்தினின்று தட்டி எழுப்புவதுபோன்று ஒரு எண்ணத்தினை உண்டாக்கும். பெரும்பாலும் நாம் அதனை உதாசீனப்படுத்திவிடுகிறோம் அல்லது கவனத்திற் கொள்ள மறுக்கிறோம். மனத்தின் ஆழத்திலிருந்து வரும் அந்த கீற்றுக் குரல் ஓர் அழைப்பாகக்கூட இருக்கலாம். எனவே அதற்கு செவிகொடுக்கப் பழகவேண்டும் என்பதற்காகவே.
அன்றொருநாள் அதிகாலைவேளை நான் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நேரம் இரும்பாலான முன்புறக்கதவு தாழிட்டிருக்க அதனைத் தாண்டி நிற்கும் மரத்தாலான கதவு வேகமாக தட்டப்பட்ட சப்தம் என் செவிகளில் விழுந்தது. எனது பெயரைச் சொல்லி யாரோ அவசரமாக அழைக்கும் குரல் கேட்க நான் விரைந்து எழுந்து கதவினைத் திறக்கச் சென்றேன். அங்கே கதவைத் திறந்துபார்த்தால் வாசலில் யாரும் இல்லை. யாரும் கதவினைத் தட்டிவிட்டு அவ்வளவு வேகமாக கண் மறைவாகச் செல்ல வாய்ப்புமில்லை. என் பெயர் சொல்லி அழைத்து அந்தக் குரலை அவதானிக்கும்போது அது நான் அறிந்த சகோதரர் ஒருவரின் தாயின் குரல். எனக்கு மிகுந்த ஆச்சரியம். குரலை மட்டுமே கேட்டு கதவுப் பகுதியில் யாரும் காணப்படாத அச்சூழலில் நான் என் மனைவியிடம் அந்தத் தாய் இந்த அதிகாலை வேளையில் அதுவும் நம் வீட்டு வாயிலில் வந்து கூப்பிட அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குரல்கேட்டு கதவினைத் திறந்துபார்த்தால் அங்கே அவர்களும் தென்படவில்லை எனத் தெரிவித்தேன். அவர்களும் ஏன் என்று புரியாமல் என்னைப் போலவே விழிக்க அதன்பின்னர்தான் நாங்கள் கேள்விப்பட்ட விடயம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னை அழைத்த அந்தத் தாய் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் இன்று காலை இறந்துவிட்டதாகவும் அறிந்தோம். நான் அதிகாலை அழைக்கப்பட்ட அதே நேரம்தான் அவர்கள் இன்னுயிர் பிரிந்திருந்தது. அந்தத் தாய் அரூபமாய் என்னை ஏன் தேடிவர வேண்டும்? அதற்கொரு பிண்னணி இருந்தது...
தொடரும்...
அந்தத் தாய்க்கு அவன் ஒரே மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மகளுடன் சேர்த்து இரு பிள்ளைகள். சுரேஷின் சிறு வயதில் தந்தை இறந்தார். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அன்றொரு நாள் அவனது தந்தை உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்தது. மருத்துவர்கள் அவர் கணையம் கெட்டு விட்டதாக சொன்னார்கள்.
உடலில் இரத்தத்திற்குப் பதில் ஆல்கஹால் ஓட ஆரம்பித்தால் உறுப்புக்கள் அதன் செயலிழப்பிற்கு அதுதானே காரணமாகிறது. ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு என்பது திரைப்பாடலுக்கு அழகாக இருக்கலாம். ஆனால் மதுக் கோப்பையில் குடியிருப்பு அவர் குடியே அற்றுப் போகும்படி இல்வாழ்வின் வேரை அசைத்துவிடக் கூடியது. போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் சூழலில் அதன் கட்டுப்பாட்டிற்குள் மனிதன் மாண்டுபோகத்தானே வேண்டும். மரணம்தானே மது தரும் பரிசு. மனத்தின் கவலைகள் மறக்கப்பட மது உதவும் என்பது பொதுவாக குடிமக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம். போதையில் இருக்கும்வரை கவலைகள் நம் எண்ண அலைகளில் பயணிப்பதில்லை. ஆனால் போதை தெளிந்தபின் மீண்டும் அதே பழைய நிலை. உலகில் பெரும்பாலானோர் மனநிலை சரியாக இருப்பதற்கு போதை ஒருவாறு உதவிசெய்கிறது என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். நாள் முழுதும் ஒருவன் விரக்தி மற்றும் கவலை எண்ணங்களினால் சூழப்பட்டால் வாழ்வே சூன்யமாகிவிடும். இவ்வுலகில் தம் எஞ்சிய நாட்களை சிலர் இன்னும் வாழ போதை வஸ்துக்கள் தேவை என்பது அவர்கள் துணிவு.
தந்தை மறைவிற்க்குப்பின் தாயின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள். தகப்பன் இல்லாத பிள்ளை. தாயின் செல்லம். முரடனாய் வளர்ந்தான் சுரேஷ். யாரையும் மதிப்பதில்லை அவன். வயதில் மூத்தவர்கள்கூட அவனிடம் பேசத் தயங்கினார்கள். பாலூட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளை பள்ளிப் படிப்பு பாதியில் நின்றது. தன் வாலிப பிராயத்தினை எட்ட மனம் போன போக்கில் செலவு செய்யத் தொடங்கினான். தாய்க்கு ஒரே கவலை. இவன் எதிர்காலம் என்னாகுமோ என்று. காலங்கள் உருண்டோடின. சொந்த வீடு. வாடகை இல்லை. தாய்க்கு சாதாரண குமாஸ்தா வேலை. சொற்ப சம்பளம். கிடைத்த வருவாய் உணவுத் தேவைக்கு சரியாய் இருந்தது. அந்த நிலையிலும் தான் பெற்ற குழந்தைகளை வறுமை தெரியாமல் வளர்த்தெடுக்க அந்தத் தாய் எவ்வளவு அரும்பாடு பட்டிருப்பாள் என்பது நமக்குத் தெரியும். பருவ வயது தாண்ட கிடைக்கும் சிறிய வேலைகளை செய்து வந்த அவனுக்கு கப்பல் வேலை ஒரு கனவாய் இருந்தது. அவன் தாய்மாமன் அதே துறையில் பணியாற்றி வந்தது அவன் ஆர்வத்தினை அத்துறையின்பால் ஈர்த்ததில் வியப்பேதும் இல்லை. கப்பல் வேலை என்றால் மும்பைக்குச் சென்று அங்கே தங்கி கப்பல் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஏறி, இறங்கி வாய்ப்பு தேடவேண்டும் என்ற விதிக்கு இவன் ஒன்றும் விலக்கில்லை. தாய் தன் மகனின் எதிர்காலம் கருதி, கடன்பட்டு இவனை மும்பைக்கு அனுப்பி வைத்தாள். வேலை கிடைத்தபாடில்லை. கையில் இருந்த பணமும் கொஞ்சம், கொஞ்சமாகக் கரைய இனி அங்கிருக்கமுடியாது என்ற நிலை. ஊர் வந்து சேர்ந்தான் குடிப்பழக்கம் தொற்றியவனாய், ஊதாரியாய்த் திரிந்தான். தாய் கண்ணீர் வடித்தாள் அவன் இழி நிலை கண்டு.
அது 2000 ஆம் ஆண்டின் முற்பகுதி. அக்கால கட்டத்தில் நான் சார்ந்திருக்கும் மறையில் ஈடுபாடு கொண்டு அதன்பால் கொண்ட ஆர்வத்தினால் சாலக்குடி, கேரளா சென்று அந்த மையத்தில் ஒருவார கால தியானத்தில் கலந்து கொண்டிருந்தேன். அதன் தாக்கம். ஏதோ உந்துதல். ஆவிக்குரிய அருங்கொடை இயக்க கூட்டம் ஒன்றை எங்கள் ஆலயத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக நண்பர் ஒருவர் மூலம் பெங்களூருவில் விவிலியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றிற்கு அழைப்பு வந்தது. அதில் ஏற்கனவே கலந்து கொண்டிருந்த நண்பர் கருத்தரங்கு பற்றிய அறிமுகம் தந்ததாலும், அடுத்த ஒருவார கருத்தரங்கு அண்மையில் நடக்கவிருந்ததாலும் அதற்கென நபர்களைத் திரட்டும் பொறுப்பு எங்களுக்கு இருந்தது. அதன்மூலம் இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் எனக்கு அறிமுகமானது. என் நண்பர் ஒருவர்மூலம் என்னிடம் வந்து சேர்ந்தான் சுரேஷ். அவன் வாழ்ந்த பண்ணை வீடு அமைந்திருந்த தெருவில் குடியிருந்தாலும் அவர்கள் குடும்பம், உறவினர்கள் என அனைவரையும் அறிந்திருந்தாலும் நாங்கள் உறவுக்குத் தூரம் காட்டினோம். பார்த்தால் புன்னகை என்ற அளவிலே எங்கள் பழக்கம் தொடர்ந்திருந்தது.
சமீபத்தில் நான் வாசித்த புத்தகம் மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள். இந்நூலின் ஆசிரியர் பூர்வஜென்ம ஞாபகங்கள் குறித்து பல்வேறு சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். இதனை ஒட்டியே பல அமானுஷ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்திருந்தார். இயல்பாகவே ஜனனம், மரணம் மற்றும் மறு பிறப்பு பற்றி பல்வேறு கேள்விகளை என்னுள் சுமந்திருக்கும் எனக்கு, இரு அனுபவங்கள் நினைவிற்கு வந்தன.
இந்தப் பதிவின் நோக்கம் புறவிடயங்களில் நமது கவனத்தினைச் சிதறடிக்கும் நமக்கு பலநேரங்களில் மனசாட்சியின் மெல்லிய குரல் கேட்காமலே போய்விடுகிறது. நம் மனத்தினை பயன்படுத்தாத சூழலில் இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக நாம் இணைந்துவிடுகிறபோது மனத்தின் ஆழத்தில் ஒரு சமிஞ்சை அல்லது உணர்வு நம்மை உறக்கத்தினின்று தட்டி எழுப்புவதுபோன்று ஒரு எண்ணத்தினை உண்டாக்கும். பெரும்பாலும் நாம் அதனை உதாசீனப்படுத்திவிடுகிறோம் அல்லது கவனத்திற் கொள்ள மறுக்கிறோம். மனத்தின் ஆழத்திலிருந்து வரும் அந்த கீற்றுக் குரல் ஓர் அழைப்பாகக்கூட இருக்கலாம். எனவே அதற்கு செவிகொடுக்கப் பழகவேண்டும் என்பதற்காகவே.
அன்றொருநாள் அதிகாலைவேளை நான் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நேரம் இரும்பாலான முன்புறக்கதவு தாழிட்டிருக்க அதனைத் தாண்டி நிற்கும் மரத்தாலான கதவு வேகமாக தட்டப்பட்ட சப்தம் என் செவிகளில் விழுந்தது. எனது பெயரைச் சொல்லி யாரோ அவசரமாக அழைக்கும் குரல் கேட்க நான் விரைந்து எழுந்து கதவினைத் திறக்கச் சென்றேன். அங்கே கதவைத் திறந்துபார்த்தால் வாசலில் யாரும் இல்லை. யாரும் கதவினைத் தட்டிவிட்டு அவ்வளவு வேகமாக கண் மறைவாகச் செல்ல வாய்ப்புமில்லை. என் பெயர் சொல்லி அழைத்து அந்தக் குரலை அவதானிக்கும்போது அது நான் அறிந்த சகோதரர் ஒருவரின் தாயின் குரல். எனக்கு மிகுந்த ஆச்சரியம். குரலை மட்டுமே கேட்டு கதவுப் பகுதியில் யாரும் காணப்படாத அச்சூழலில் நான் என் மனைவியிடம் அந்தத் தாய் இந்த அதிகாலை வேளையில் அதுவும் நம் வீட்டு வாயிலில் வந்து கூப்பிட அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குரல்கேட்டு கதவினைத் திறந்துபார்த்தால் அங்கே அவர்களும் தென்படவில்லை எனத் தெரிவித்தேன். அவர்களும் ஏன் என்று புரியாமல் என்னைப் போலவே விழிக்க அதன்பின்னர்தான் நாங்கள் கேள்விப்பட்ட விடயம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னை அழைத்த அந்தத் தாய் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் இன்று காலை இறந்துவிட்டதாகவும் அறிந்தோம். நான் அதிகாலை அழைக்கப்பட்ட அதே நேரம்தான் அவர்கள் இன்னுயிர் பிரிந்திருந்தது. அந்தத் தாய் அரூபமாய் என்னை ஏன் தேடிவர வேண்டும்? அதற்கொரு பிண்னணி இருந்தது...
தொடரும்...
Well written.. keep going. Post on our FB page also. You dont have to disclose ur identity as a writer if you dont want to
ReplyDelete