பத்துக் கட்டளைகள்
(வயது நாற்பதைத் தாண்டியவர்களுக்கு மட்டும்)
1. மற்றவர்களுடனான உறவில் மகிழ்ந்திடுங்கள். தேவைக்கு அதிகமான பொருள் சேமிப்பில் உங்கள் கவனம் செல்லாதிருக்கட்டும்.
2. வருந்தி உழைத்து சேமித்தவற்றில் உங்கள் செலவு அமையட்டும், உங்கள் பயணம் உட்பட. மீதமிருப்பவை உங்கள் எஞ்சிய வாழ்நாட்களுக்காக. வாரிசுகளுக்காக பணம்/சொத்து/பொருள் எதையும் விட்டுச் செல்ல எண்ண வேண்டாம். அது பிள்ளைகளின் பிரிவினனக்கு வழிவகுக்கும்.
3. கடந்து போன நேற்றைய நாளுக்காகவும், நிச்சயமில்லாத நாளைக்காகவும் அன்றி, கையில் இருக்கும் தற்போதைய நாளுக்காக/பொழுதுக்காக வாழுங்கள்.
4. பேரக்குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதில் இன்பம் காணட்டும். ஆனால் அவர்களுக்கான முழுநேரக் காப்பாளராக அல்ல. அந்தக் கடமை நாம் பெற்ற பிள்ளைகளுக்குரியது. அவர்கள்தான் தமது குழந்தைகளுக்கான முழு பொறுப்பாளிகள்.
5. உங்கள் பலவீனம், நோய் மற்றும் உடல் உபாதைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அவை நமது முதுமையின் அங்கங்களே. அவை தாண்டிய நமது உடல் ஆரோக்கியத்தை அனுபவிப்போம்.
6. உடைமையாக நமது இருப்பில் இருப்பவை மட்டும் போதும். இல்லதவற்றை எதிர்நோக்கிய மிகக்கடின உழைப்பு வேண்டாம். ஏனென்றால் அதற்கான சரியான தருணம் இதுவல்ல. காலம் கடந்துவிட்டது.
7. உங்கள் மனனவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உங்கள் நண்பர்களுடனான இருப்பில் திளைத்திடுங்கள். உங்களை உள்ளபடி ERஅப்படியே ஏற்றுக் கொள்ளும் எவரையும் அன்பு செய்யுங்கள். உடைமைகளுக்காக அன்பு செய்வோர் உங்களைத் துயரத்திற்குள்ளாக்குவார்கள்.
8. உங்களையும், மற்றவரையும் மன்னியுங்கள். அறிந்தோ, அறியாமலோ அயலார் மட்டில் புரிந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோருங்கள். இதன்மூலம் கிடைத்தற்கரிய ஆன்ம அமைதியைப் பெறுவீர்கள்.
9. எவருக்கும் நிச்சயமான மரணத்தை நேசியுங்கள். இப்புவிவாழ்வின் ஒர் ஒப்பற்ற பகுதியே அது. மரணத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம். அது நம் வாழ்வின் ஓர் புதிய பரிணாமமே. ஆகையால் சாவுக்காக உங்களைத் தயார் செய்யுங்கள். இது எல்லாம் வல்ல இறைவனுடனான சங்கமத்திற்கான நுழைவாயில்.
10. உங்களைத் தாயின் கருவில் உருவாகும் முன்பே பெயர் சொல்லி அழைத்த படைப்பின் காரண கர்த்தாவிடம் சரண் அடைந்து அதன்மூலம் அமைதி காணுங்கள். இப் பூலோக வாழ்வை முடித்த பின் நீங்கள் தஞ்சமைடையப் போவது அவரது திருவடிகளில்தான்.
0 comments:
Post a Comment